Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலை தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதிய பைக்… தந்தை கண்ணெதிரே 6 வயது மகன் பலி… சோகத்தில் குடும்பத்தினர்…!!!!

சாலை தடுப்பு சுவரில் பைக் மோதிய விபத்தில் தந்தை கண் எதிரே ஆறு வயது மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருவொற்றியூரில் சரஸ்வதி நகர் 12வது தெருவில் வசித்து வருபவர் அர்ஜுன். இவர் தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றார். தனியார் தொழிற்சாலையில் இரவு நேரம் வேலை பார்த்து வருவதால் பகல் நேரத்தில் பகுதிநேர வேலையாக தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு பணியை முடித்துவிட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்த அர்ஜுன் வழக்கம் போன்று மணலியில் உணவு டெலிவரி செய்வதற்கு தன்னுடைய மூன்றாவது மகன் புகழ் குமரனை கூட்டி சென்று இருந்தார்.

அப்போது உணவு டெலிவரி முடித்துவிட்டு பைக்கில் மணலி விரைவு ரோடு வழியாக சாத்தாங்காடு காவல் நிலையம் அருகில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது அர்ஜுன் தூக்கக்கலக்கத்தில் இருந்ததால் பைக் நிலை தடுமாறி எதிர்பாராதவிதமாக சாலை தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட புகழ் குமரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் படுகாயமடைந்த அர்ஜுனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |