Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“உணவு தேடி சென்ற யானை” திடீரென நடந்த கோர விபத்து…. சோகத்தில் பொதுமக்கள்….!!!!

உயிரிழந்த யானையின் சடலத்தை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர் சோலை பகுதியில் முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகே பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் 35 வயது உடைய அந்த பெண் யானை  இரவு உணவு தேடி  மரத்தில் இருந்த கிளையை முறிக்க  முயன்றுள்ளது.

அப்போது திடீரென யானையை   மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக   உயிரிழந்தது தெரியவந்துள்ளது.இதனையடுத்து மருத்துவ குழுவினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |