Categories
மாநில செய்திகள்

தமிகத்தில் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி வீடுகள்… உறுதியளித்த அமைச்சர்… குஷியான அறிவிப்பு….!!

தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் சார்பில் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் ஹிதேஸ் குமார், நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனர் கோவிந்தராவ், மாவட்ட கலெக்டர்கள் ராகுல்நாத், ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் தாம்பரம் எஸ்.ஆர். ராஜா, பல்லாவரம் கருணாநிதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 4,000 வீடுகள் கட்டப்பட்டு குடியமர்த்தப்படாமல் உள்ளது. இந்த வீடுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு 3 மாதத்தில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமில்லாமல் ஏரி ஆக்கிரமிப்புகளுக்கு வீடுகள் ஒதுக்குவதில் உள்ள சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு அவர்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்படும். மேலும் தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வருவாய் உள்ள ஏழை எளியோருக்கு வீடுகள் ஒதுக்கப்படும். அதுமட்டுமில்லாமல் சிட்லபாக்கம் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றப்பட்டதில் இருந்த 480 பேருக்கு மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட தைலாபுரத்தில் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |