சாலையை கடக்க முயன்ற பாம்பை அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி சாலையில் மலைப்பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பாம்புகள் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாம்புகள் மீட்பு குழுவினர் நீண்ட நேரம் போராடி 12 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை பிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த பாம்பை களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.