உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதிக்க வேண்டும் என்று இந்து பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டனர். அதுமட்டுமில்லாமல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கடந்த 3 நாட்களாக ஞானவாபி மசூதி வளாகத்தில் நடைபெற்ற கள ஆய்வு இன்று நிறைவடைந்தது.
இதில் முக்கிய அம்சமாக ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு குறிப்பிட்ட பகுதியில் சீல் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதிகள் யாரும் நுழையக்கூடாது என்றும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் பாதுகாப்புக்கு அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு செய்ய தடை கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை வர உள்ளது.