மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ப. சிதம்பரத்திற்கு சொந்தமான 7 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டுவருகிறது. ப.சிதம்பரத்தின் மகனும் சிவங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தினர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய எச். ராஜா உறுதியான தகவல் இல்லாமல் ப .சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை நடக்க வாய்ப்பில்லை. இந்த சோதனையின் அடிப்படையில் ப.சிதம்பரம் குடும்பத்தினர் திகார் செல்லும் வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற முடிவால் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆபத்தில்லை என்று பேட்டியளித்துள்ளார்.