Categories
அரசியல் மாநில செய்திகள்

ப.சிதம்பரம் குடும்பத்தினர் திகார் செல்லும் வாய்ப்பு…. ஹெச்.ராஜா பரபரப்பு பேட்டி…!!!!

மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ப. சிதம்பரத்திற்கு சொந்தமான 7 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டுவருகிறது. ப.சிதம்பரத்தின் மகனும் சிவங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தினர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய எச். ராஜா உறுதியான தகவல் இல்லாமல் ப .சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை நடக்க வாய்ப்பில்லை. இந்த சோதனையின் அடிப்படையில் ப.சிதம்பரம் குடும்பத்தினர் திகார் செல்லும் வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற முடிவால் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆபத்தில்லை என்று பேட்டியளித்துள்ளார்.

Categories

Tech |