Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…. 30 ஆண்டுகளில் 60 மாணவிகள்…. பள்ளி ஆசிரியர் செய்த செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கேரள மாநிலம் மலப்புரம் நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சசிகுமார் கவுன்சிலராக இருந்தார். அதன் பிறகு அவர் அங்குள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். இதனை சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு அவருடைய நண்பர்கள் மற்றும் பல கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் அவரிடம் பயின்ற மாணவர் ஒருவர் சசிகுமார் ஆசிரியராக பணியாற்றியபோது பல மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தப்பதிவு சோஷியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவியது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில கல்வி துறை அமைச்சர் சிவன் குட்டி உத்தரவிட்டார். அந்த விசாரணையில் சசிகுமார் ஆசிரியராக பணிபுரிந்த 30 ஆண்டு காலத்தில் 60க்கும் மேற்பட்ட மாணவிகளை பலாத்காரம் செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மலப்புரம் போலீசார் சசிகுமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தற்போது பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்கத் தொடங்கியுள்ளனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |