Categories
உலக செய்திகள்

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா…. பிரபல நாட்டில் 15 பேர் உயிரிழப்பு…. தென் கொரியாவின் தடுப்பூசி உதவிய ஏற்குமா….?

வடகொரியாவில் கொரோனா பரவியுள்ளதால் கிம் ஜாங் உன் உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கம்  அமல்படுத்தியுள்ளார்.

சீனாவின் நட்பு நாடாகவும், பக்கத்து நாடாகவும் இருந்தபோதிலும் வடகொரியா கொரோனா  வைரஸ் தொற்றுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தப்பித்து வந்தது. இந்த நிலையில் தற்போது அங்கும் கொரோனா  வைரஸ் புகுந்துள்ளது. கடந்த 12ஆம் தேதி பியாங்யாங் நகரில் நடைபெற்ற ஆளும் கட்சியின் அரசியல் விவகார குழு கூட்டத்தில் இதனை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் அறிவித்து உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கம்  அமல்படுத்தி இருக்கின்றார்.

மேலும் இதுவரை தடுப்பூசி நுழைந்திடாத  அந்த நாட்டில் கொரோனா  பேரிழப்பை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். கடந்த மாதம் முழுவதும்   காய்ச்சல் அங்கு உயர தொடங்கியுள்ளது. அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஓமைக்ரான்  வைரஸால் தூண்டப்பட்ட கொரோனா அலை அங்கும்  தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கியது என்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வரை 27 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இதன் காரணமாக அங்கு பலி எண்ணிக்கை 42 ஆக அதிகரித்து  விட்டது. இந்த நிலையில் 2 கோடியே 60 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்ற அந்த நாட்டில் சுகாதார கட்டமைப்பு வசதிகள் பெரிய அளவில் இல்லை. மேலும் யாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதெல்லாம் உலக அரங்கை மிகவும் கவலைக்குள்ளாக்கி  இருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த தொற்று பற்றி அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் அதிகாரிகளை கூட்டி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

அப்போது கொரோனா வெடிப்பை அவர் வரலாற்றுரீதியான எழுச்சி என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வெடிப்பை கூடிய சீக்கிரம் நிலைப்படுத்த அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒற்றுமை வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கின்றார். காய்ச்சல் உள்ளவர்களும், பிற அறிகுறி இருப்பவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அனைத்து மாகாணங்கள், நகரங்கள், சிறு நகரங்கள் என நாடு முழுவதும்   பொது முடக்கம் அமலில் உள்ளதாகவும், உற்பத்தி பிரிவுகள் குடியிருப்புகள் மூடப்பட்டு இருப்பதாகவும் அனைத்து மக்களும் கடுமையான  பரிசோதனைக்கு உட்படுத்தபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா  மத்தியிலும் அதிகாரிகள் பொருளாதார கட்டுமான திட்ட பணிகளை தொடரும்படி தலைவர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இந்த நாட்டிற்கு தென்கொரியாவும், சீனாவும் தடுப்பூசி மற்றும்  மருந்துகளை உதவியாக அனுப்பி வைக்க முன் வந்து இருக்கின்றது. ஆனால் இதுபற்றி வடகொரிய தலைமை பகிரங்கமாக பதில் வழங்கவில்லை. ஆனாலும் தென் கொரியாவின் உதவிகளை வடகொரியா ஏற்றுக்கொள்ளும் என தென்கொரிய உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் பார்க் ஜீ வோன் கூறியுள்ளார். அப்படி ஏற்றால்தான் பேரழிவை தடுக்க வாய்ப்பு உருவாகும். மேலும் இந்த வாரத்தின் பிற்பகுதியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தென்கொரியா செல்ல இருக்கின்ற நிலையில் வடகொரியாவின் கொரோனா பரவுவது முக்கிய விதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |