Categories
மாநில செய்திகள்

“இந்தியா பெருமை அடைகிறது”….. தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்….!!!!

தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

வாடிகனில் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவருக்கு புனித பட்டத்தை வழங்கினார். அவருடன் சேர்ந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 9 மறைசாட்சிக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தேவசகாயம் புனிதர் பட்டம் பெறுவதன் மூலமாக இந்தியா பெருமை அடைகிறது .இந்தியாவின் திருமணமான பொதுநிலையினரின் முதல் புனிதர் என்ற பெருமையை தேவசகாயம் பெற்றுள்ளார். இந்திய மண்ணில் ரத்தம் சிந்தி மறைசாட்சியாக மரித்த முதல் இந்திய புனிதர் என்ற புகழும் அவருக்கு கிடைத்துள்ளது.

Categories

Tech |