Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தண்ணீரில் மூழ்கி பலியான சிறுவன்…. அச்சத்தில் நண்பர்கள் செய்த செயல்…. கதறி அழுத பெற்றோர்…!!

5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றத்தில் லிங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலேஷ்(10) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அகிலேஷ் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கண்மாய்க்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அகிலேஷ் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அகிலேஷின் நண்பர்கள் பயத்தில் யாரிடமும் சொல்லாமல் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

இதற்கிடையே மகனை காணாமல் தேடி அலைந்த பெற்றோர் கண்மாயில் அகிலேஷின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அகிலேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |