“மனைவியின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள்” என்று நெட்டிசன்களுக்கு புனே போலீஸ் கமிஷனர் அறிவுரை வழங்கியுள்ளார்.
புனே போலீஸ் கமிஷனர் அமிதாப் குப்தா சமீப காலத்தில் பொதுமக்களுடன் உரையாடுகின்ற வகையில் டுவிட்டரில் லவ்வித்சிபி புனேசிட்டி என்கின்ற ஹாஷ் டாக்கை ஆரம்பித்தார். இதன் மூலம் அவர் சமீபகாலத்தில் ட்விட்டரில் நெட்டிசன்கள் உடன் உரையாடி வந்துள்ளார். அப்போது அவர் பலரின் கேள்விகளுக்கு தகுந்த பதில்களை அளித்து உள்ளார். அதில் நெட்டிசன் ஒருவர் நான் மும்பையிலிருந்து பெங்களூருக்கு மாறலாம் என்று நினைக்கின்றேன். என்னுடைய மனைவி பூனேக்கு மாறலாம் என்று தெரிவிக்கிறார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என கேட்டார்.
அதற்கு பதில் கொடுத்த கமிஷனர் பெங்களூர், புனே இரண்டும் அழகான நகரங்கள் தான். ஆனால் சட்ட புத்தகம் என்ன சொல்கின்றது என்றால் “எப்போதும் மனைவியின் பேச்சைக் கேட்டு நடந்து கொள்ளுங்கள்” என்று கூறுகின்றது. நான் உட்பட எல்லோரும் இதை தான் செய்கின்றார்கள் என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று இன்னொருவர் சிக்னலை மீறி செல்கின்ற வாகனங்களின் சாவியை காவல்துறையினர் எடுத்துக்கொள்வது அவசியமா என்று கேட்டார். அதற்கு கமிஷனர் சிக்னலை மீறி வாகனம் ஓட்டுவது அவசியமா? என்று தெரிவித்தார். இதேபோன்று பலதரப்பட்ட கேள்விகளுக்கு கமிஷனர் பதில் அளித்துள்ளார்.