Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : இலங்கைக்கு பொருட்களை அனுப்ப குழு அமைப்பு….. தமிழக அரசு அதிரடி….!!!!

இலங்கைக்கு பொருட்களை அனுப்ப 4  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் தற்போது சூழ்நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது பதவியை ராஜினாமா செய்த நிலையிலும், அந்நாட்டின் அதிபர் கோத்தபாய ராஜபக்சே பதவி விலகாததனால் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்து வருகின்றது. காவல்துறையினர் வன்முறையை தடுக்க வேண்டும் என்பதற்காக முழு ஊரடங்கு அமல் படுத்தியுள்ளனர்.

இலங்கையில் உணவு இல்லாமல் தவித்து வரும் மக்களுக்கு பொருட்களை அனுப்புவதற்கு 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அதிகாரிகள் ஜெயசிந்தா பிரபாகர், சுப்பையன் உட்பட நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து இந்த பொருட்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |