இலங்கைக்கு தேவை இன்றி செல்ல வேண்டாம் என்று சிங்கப்பூர் நாட்டினருக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு மக்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலகாதனால் இலங்கை கொழும்புவில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் அங்கு பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேவையின்றி இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று சிங்கப்பூர் நாட்டினருக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.