Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

இலங்கையில் சிறைபிடிக்கபட்ட….. தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை…..!!!!

தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீனவர்கள் 12 பேர் ஜாமினில் செல்வதற்கு தலா ஒரு கோடி செலுத்த வேண்டும் என்று அண்மையில் நீதிபதி தெரிவித்தது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |