Categories
தேசிய செய்திகள்

தாஜ்மஹால் நிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்திற்கு சொந்தமானது…. கிளம்பிய சர்ச்சை…!!!

தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு முன், அப்பகுதியில் கோயில் இருந்ததாகக் கூறி தற்போது மீண்டும் தொடுக்கப்பட்ட வழக்கு அலகாபாத் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பாஜக எம்பி தியா குமாரி தாஜ்மஹால் கட்டப்பட்ட நிலம் முதலில் ஜெய்ப்பூர் ஆட்சியாளர் ஜெய் சிங்கிற்கு சொந்தமானது என்றும் இது முகலாய பேரரசர் ஷாஜஹானால் கையகப்படுத்தப்பட்டது என்றும் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு முன் அங்கு என்ன இருந்தது என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் அதனை தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது என்றும் அவர் கூறினார்.
அதற்கான சான்றுகள் மற்றும் ஆவணங்கள் முந்தைய ஜெய்ப்பூர் அரச குடும்பத்திடம் உள்ளன. அப்போதைய காலகட்டத்தில், நீதித்துறை இல்லாததால், அப்போது மேல்முறையீடு செய்திருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

 

 

Categories

Tech |