நடிகை மந்திரா பேடி பிகினி உடையில் செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
மந்திரா பேடி இந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் 1994ஆம் வருடம் வெளியான சாந்தி தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதையடுத்து பல தொடர்களில் நடித்து வந்த இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது அதன்பின் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தொகுப்பாளர், பேஷன் டிசைனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் தமிழில் சிம்புவின் மன்மதன் திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார்.
https://www.instagram.com/p/CdZyFG8Ivel/?utm_source=ig_embed&ig_rid=0189dbf3-962a-4d52-9444-627975028174
இவர் சென்ற 1999-ஆம் வருடம் தயாரிப்பாளர் ராஜ் கவுஷலை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சென்ற ஆண்டு ஜூன் மாதம் இவரின் கணவர் ராஜ் கவுசல் மாரடைப்பால் உயிரிழந்தார். கணவரின் மரணம் பெரும் இழப்பாக இருந்த நிலையில் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றார். அண்மையில் இவர் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி வந்தனர். இந்நிலையில் 50 வயதாகும் மந்திரா பேடி பிகினி உடையில் செல்பி எடுத்து ஹாட்டான புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த இணையதள வாசிகளோ கமெண்ட் பாக்ஸில் சூப்பர், ஹாட் என கூறி வருகின்றனர்.