Categories
மாநில செய்திகள்

BREAKING: டூவிலர், 4வீலர் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை…. இனி இதை பயன்படுத்த கூடாது….!!!

தமிழகத்தில் அரசு வாகனங்களை தவிர மற்ற அரசுடமையாக்கப்பட்ட நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு வாகனம் அல்லாத மற்ற வாகனங்களில் தற்போது தமிழகம் முழுவதும் பதிவு எண் பலகை யில் இந்த எழுத்துக்கள் எழுதப்பட்டு அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.

அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விளக்கு உள்ளது. எனவே உரிய வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்குபெற்ற தமிழக அரசின் வாகனங்களில் மட்டுமே இந்த எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்றும் இதனை மீறி இந்த எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |