Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஊதிய உயர்வு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 34 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளதால் அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மீண்டும் ஊதிய உயர்வு கொடுக்கப்பட உள்ளது. கடந்த ஜனவரி மாதம் தான் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது சில்லரை பணவீக்கம் அதிகரித்து அதன் காரணமாக 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக அகவிலைப்படி உயர உள்ளது. தமிழ்நாடு அரசும் தனது ஊழியர்களுக்கு கடந்த ஜனவரியில் ஊதிய உயர்வு கொடுத்தது. மத்திய அரசை தொடர்ந்து ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் தமிழக அரசு ஊதிய உயர்வு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |