Categories
தேசிய செய்திகள்

இன்று கரையை கடக்கும் அசானி புயல்….. தயார் நிலையில் பேரிடர் மீட்புப்படைகள்…..!!!!

அசானி புயல் ஆந்திராவில் இன்று கரையை கடக்க வாய்ப்பு உள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்தது. இதனை அசானி புயல் என்று அழைத்தனர். இந்தப் புயல் இன்று பிற்பகல் காக்கிநாடா விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடந்து ஒடிசா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் கன மழை கொட்டி தீர்க்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. இதனால் ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளிலும் மேற்கு வங்காளத்தின் கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில் அதனை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஆந்திராவில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 9 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 7 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. ஒடிசாவில் 17 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 17 குழுக்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

Categories

Tech |