Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : ”பரனுரில் போலீசார் துப்பாக்கி சூடு” சுங்கச்சாவடி மோதலில் அதிர்ச்சி …!!

பரனுர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடிக்கு கடந்த 26ஆம் தேதி கோயம்பேட்டில் இருந்து திருச்சி  நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனரிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தகராறு செய்து பேரூந்து ஓட்டுநர் இளங்கோவனை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள் , அந்த வழியாக வந்த பேருந்து ஓட்டுநர்கள் சுங்கச்சாவடி கட்டணம் வாங்கும் இடத்தை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அரசு ஊழியர்களை தாக்கியதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் குல்தீப் சிங் உள்பட 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளநிலையில் சுங்க சாவடி பொருளாளர் அளித்த புகாரில்  சுங்கச்சாவடியில் நடந்த மோதலின்போது ரூ.18 லட்சம் பணத்தை காணவில்லை என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று சுங்கச்சாவடியில் நடந்த மோதலை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தை கலைத்துள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியள்ளது.

Categories

Tech |