இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது.
அதனால் தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையில் இருந்து ராணுவ பாதுகாப்புடன் மஹிந்த ராஜபக்ஷ வெளியேறினார். கொழும்பு வீதிகளில் போராட்டத்தால் பதற்றம் நீடிக்கும் சூழலில் உயிருக்கு பயந்து வெளிநாட்டிற்கு அவர் தப்பிச் செல்ல உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது. இந்நிலையில் மகேந்திர ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் ஒருபோதும் இல்லை. என் தந்தை பாதுகாப்பாகவும் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் பேட்டியளித்துள்ளார்.