சிம்புவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனரானார். இந்த படம் வெளியாக கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேலானது.
இதனையடுத்து, இவருக்கு ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் வெற்றி அவருக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்நிலையில், போடா போடி படத்தில் சிம்புவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
அதில், அந்த படத்தை இயக்கும்போது சிம்புவிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும், மேலும் சில பாடல் வரிகளையும் அவர் எழுத சொல்லி விக்னேஷ் சிவனை பாராட்டுவாராம். சிம்புவின் பாராட்டுதான் அவரை பல பாடல்களை எழுத வைத்துள்ளது. தன்னை சிம்பு முதல் படத்தில் நன்றாக ஆதரித்ததாக விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.