Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம்… திமுகவுக்கு அனுமதியளித்த போலீசார்..!!

தி.மு.க சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திருவாரூர் மற்றும் தஞ்சையில் போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதியளித்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் நீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்ட பாலைவனமாகும். எனவே இத்திட்டத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

முன்பு ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே உள்ள விதிகளின்படி, சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் கிணறு அமைக்கப்பட உள்ள பகுதியை சுற்றி வசிக்கும் பொதுமக்களிடமும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைப்பதற்கு  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை என்றும், பொதுமக்களிடமும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்றும் மத்திய அரசு மாற்றம் செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட  அரசியல் தலைவர்கள்  பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க சார்பில் திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நாளை மாபெரும் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்கப்பட்டிருந்தது. முதலில் போலீசார் அனுமதிகொடுக்க மறுத்தனர். பின்னர் போலீஸ் எஸ்.பி துரை போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தனர். மேலும் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்த வித இடையூறுமில்லாமல் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதேபோல் தஞ்சையிலும்  திமுகவினர் போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதியளித்துள்ளனர்.

Categories

Tech |