Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க!…. தமிழகம் முழுவதும் மே 8ஆம் தேதி…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் 1.50 கோடி பேர் உள்ளனர். இதனால் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பொது சுகாதாரத்துறை இணையதளத்தில் கிராம வாரியாக தயாரிக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தடுப்பூசி போடாதவர்களின் மொபைல் எண், முதல் டோஸ் போட்ட நாள், முதல் டோஸ் போட்டு எத்தனை நாள் ஆகியுள்ளன, இரண்டாவது டோஸ் போட வேண்டிய நாள், தடுப்பூசி போடாதவர்கள் பெயர், தடுப்பூசியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் மே 8ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இதுவரை 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு இந்த முகாமில் முக்கியத்துவம் அளிக்கப்படும். எனவே தடுப்பூசி செலுத்தாதவர்கள் இந்த சூப்பர் மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Categories

Tech |