முதன்முதலில் நயன்தாராவை சந்தித்த தருணம் குறித்து விக்னேஷ் சிவன் மனம் திறந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்பு நடிப்பில் வெளியான ‘போடாபோடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, நயன்தாராவை சந்தித்த முதல் தருணம் குறித்து விக்னேஷ் சிவன் மனம் திறந்துள்ளார்.
அவர் கூறியதாவது, முதன்முதலில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் கதையை சொல்வதற்காக நயன்தாராவை விக்னேஷ் சிவன் சந்தித்துள்ளார். நயன்தாராவுக்கு கதை பிடிக்கவில்லை என்றாலும், ஒரு பிரபல நடிகையிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் தான் முதலில் விக்னேஷ் சிவன் சென்றதாக கூறியுள்ளார். ஆனால், விக்னேஷ் சிவன் கூறிய கதை நயன்தாராவுக்கு பிடித்துவிட்டது. கதை மட்டுமல்லாமல் அவரையும் நயன்தாராவுக்கு பிடித்துவிட்டது என்பது தான் குறிப்பிடத்தக்கது.