தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பாக மாவட்ட, மாநில அளவில் கலை போட்டிகள் நடைபெறுவதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பாக கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களை ஊக்கப்படுத்த 17 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு குரல் இசை, கருவி இசை, கிராமிய நடனம், ஓவியம், பரதநாட்டியம் என பல கலை போட்டிகள் மாவட்ட, மாநில அளவில் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த போட்டியில் தனிநபர் அதிகபட்சமாக 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்த அனுமதி உண்டு.
மேலும் மாவட்ட போட்டியில் முதலிடம் பெற்றவர் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு அனுமதி உண்டு. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் மே 10-ஆம் தேதிக்குள் மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சீபுரம் -631502 என்ற முகவரிக்கு தங்களது விவரங்களை அனுப்பி வைக்கலாம். அல்லது 9150085001 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு விவரங்களை தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.