Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. உணவுகள், டீ, காபி விலை அதிரடி உயர்வு…. ஷாக் நியூஸ்….!!!

சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி வருகின்றனர். அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான புதிய கேஸ் சிலிண்டரின் விலை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ₹268.50 உயர்ந்து ₹2,406க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து பெட்ரோல்-டீசலை போலவே கியாஸ் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

எனவே இந்த விலை உயர்வால், ஓட்டல் தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் வணிக சிலிண்டரின் விலை உயர்வால் மீண்டும் தமிழகத்தில் உணவுகள், டீ, காபி விலை 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட 2 இட்லி  35 ரூபாய் எனவும்  25 ரூபாய்க்கு விற்கப்பட்ட காபி 28 முதல் 30 ரூபாய் மற்றும் பூரி, பொங்கல், தோசை, கிச்சடி உட்பட அனைத்து வகை உணவுகளும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் மதிய சாப்பாடு ரூ.120 இல் இருந்து ரூ.130 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

Categories

Tech |