Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஸ்கூலுக்கு ஒழுங்கா போ” மகளை கண்டித்த பெற்றோர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பை பெரியகுளம் காலனியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள்(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சரிவர செல்லாமல் இருந்த இசக்கியம்மாளை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த இசக்கியம்மாள் அளவுக்கு அதிகமான சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்துவிட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இசக்கியம்மாள் நேற்று பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |