Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பசியைத் தூண்டும், உடல் சூட்டை போக்கும்… கறிவேப்பிலையின் ஆச்சரியம் ஊட்டும் மருத்துவ குணம் ..! 

உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச் சத்தும் கறிவேப்பிலையில் அதிகம் உள்ளது. நாம் உண்ணும் உணவில் கறிவேப்பிலையைத்தான் அதிகம் சேர்க்கிறோம்.கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்து விடாதீர்கள்.உணவுடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும்.

கறிவேப்பிலை பல வியாதிகளை தீர்க்கிறது. கறிவேப்பிலை உடலுக்கு பலம் அளிக்கக்கூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது.

* பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை போக்கும். கறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தை கொடுக்கும். குமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை  கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.

* வாந்தி, நாக்கு ருசி இல்லாமல்  போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தி விடும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.

*கறிவேப்பிலை  சாறு இரத்தத்தில் இருக்கும்  வெள்ளை அணுக்களைப் பலப்படுத்தும். பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்து கொண்டால்  நல்லது.* கண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை மருந்தாக உதவும்.  அதாவது நாவில் ருசி அறியும்  உணர்ச்சி இழைகள் மறத்துப்போவதே  காரணம். இதைப் போக்க கறிவேப்பிலைத் துவையல்  பயன்படும்.

*கறிவேப்பிலையை நன்கு அரைத்து அத்துடன்  முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும். இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்து, அதைச் சுத்தம் செய்து,  அம்மியில்  தேவையான அளவு இஞ்சி, சீரகம், புளி, பச்சை மிளகாய், உப்பு இவைகளை வைத்து, மை போல துவையலாக அரைத்து, சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாவில் ருசி அறியும்  தன்மை ஏற்படும்.

* சுத்தமாக எடுத்த கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக் கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்து சாப்பிடக் வேண்டும். அடிக்கடி இந்த துவையலை சாதத்துடன் ருசித்துச் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது. உடல் உறுதி பெறும். பைத்தியம் தெளிய புத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை  கறிவேப்பிலை  உண்டாக்கும்.

 

 

Categories

Tech |