Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சாய்ந்து விழுந்த ராட்சத மரம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

ராட்சத மரம் சாய்ந்து விழுந்ததால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், தவிட்டுபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில் டி.என்.பி.எல் காகித ஆலை செல்லும் சாலையில் இருந்த ராட்சத மரம் நடுரோட்டில் விழுந்தது. மேலும் மரம் விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் அப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனை அடுத்து மின்வாரிய அதிகாரிகள் அறுந்து கிடந்த மின் கம்பிகளை சீரமைத்தனர். சுமார் 6 மணி நேரம் கழித்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

Categories

Tech |