Categories
தேசிய செய்திகள்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவித்தொகை….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு கூட திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பணம் வழங்க இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ரூபாய் 3000 முதல் 7,500 வரை பண உதவி வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக இலங்கையின் வர்த்தகத் துறை மந்திரி ஷெஹான் சேமசிங்க தெரிவித்திருந்ததாவது: “நாட்டின் பொருளாதார நெருக்கடியால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக வங்கி இலங்கைக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகின்றது. தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் வகையில் இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை வழங்க உலக வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. இதில் 300 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி இதற்காக பயன்படுத்தப்படும். சுமார் 33 லட்சம் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு மே மாதம் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் பணம் வழங்கப்படும்.

முதியோர் உதவித்தொகை, சிறுநீரக நோயாளிகளுக்கான உதவி தொகை மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை என பல்வேறு பிரிவுகளின் கீழ் 3,000 முதல் 7,500 வரையான தொகைகள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் வங்கிகள் மூலம் மட்டுமே பரிமாற்றம் செய்யப்படும் எனவும் வங்கி கணக்கு இல்லாதோர் உடனடியாக வங்கி கணக்கை தொடங்கும் படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |