Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சூரப்பட்டி கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் பேக்கரியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜசேகரும், தனலட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த தனலட்சுமியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி அப்பகுதியில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ராஜசேகரின் குடும்பத்தினருடன் புதுமண தம்பதியினரை அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |