பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இதில் முதல் நாடாக அவர் நேற்று அதிகாலையில் ஜெர்மனியை சென்றுஅடைந்தார். அப்போது தலை நகர் பெர்லினிலுள்ள அதிபர் மாளிகையில் வைத்து மோடிக்கு இராணுவ அணிவகுப்புடன்கூடிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு அவரை பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் வரவேற்றார். இதையடுத்து ஓலாப்ஸ்கோல்ஸ்-மோடி இரண்டு பேரும் சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்கினர்.
அப்போது பலத்துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக இருதலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். முன்பாக பெர்லினில் இந்தியவம்சாவளியினர் முன்பு மோடி உரைஆற்றினார். இதற்காக விழா நடைபெறும் அரங்குக்கு வந்த பிரதமர் மோடியை, “2024 மோடி ஒன்ஸ்மோர்” எனும் கோஷத்துடன் இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர்.
அதன்பின் பேசிய மோடி, “உங்கள் அனைவரையும் பார்த்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஜெர்மனியின் பல்வேறு நகரங்களிலிருந்து நீங்கள் வருகை தந்துள்ளீர்கள். இன்று என்னைப் பற்றியோ என் அரசைப் பற்றியோ நான் பேசப்போவதில்லை. அதற்கு மாறாக கோடிக்கணக்கான இந்தியர்களின் திறன்கள் குறித்து அவர்களை புகழ்ந்து பாடவும் விரும்புகிறேன். கோடிக்கணக்கான இந்தியர்களை பற்றி நான் பேசும்போது, இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டும் அல்ல, ஜெர்மனியில் வசிக்கும் இந்தியர்கள் பற்றியும் சேர்த்தே பேசப்போகிறேன்” என்று கூறினார்.