அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்துவதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசை தொடர்ந்து தற்போது மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக அகவிலைப்படியை உயர்த்து அறிவுறுத்தி வருகின்றது. சமீபத்தில்தான் ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேச அரசுகள் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது குஜராத் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3% உயர்த்துவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த அகவிலைப்படி உயர்வானது 2021 ஜூலை 1 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி அரசு அதிகாரிகளுக்கு இந்த சலுகை 3 சதவிகித அகவிலைப்படி வழங்கப்படுகிறது. மே ஒன்றாம் தேதி குஜராத் மாநிலம் உருவான நாள் என்ற காரணத்தினால் அன்றைய நாளில் மகிழ்ச்சி தரும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அகவிலைப்படி 10 மாத நிலுவை தொகை இரண்டு தவணைகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல் தவணை 2022 மே மாதத்திலும், இரண்டாவது தவணை 2022 ஜூன் மாதத்திலும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் லட்சக் கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள்.
குஜராத் மாநில அரசின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஏற்கெனவே 7ஆவது ஊதியக் குழுவின் பலனைப் பெற்று வரும் ஊழியர்கள்களும் பென்சன்தாரர்களும் பயனடைவார்கள். இந்த அறிவிப்பால் அரசுக்கு ரூ.1,217.44 கோடி கூடுதல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களும் ஒவ்வொன்றாக அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.