Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கடை வீதிக்கு சென்று வருகிறேன்” உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன முதியவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகனான குருநாதன் என்பவர் முதியவரை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கடை வீதிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு கிருஷ்ணமூர்த்தி வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் குருநாதன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதியவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |