Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருமணமான 1 வருடத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வல்லவாரி மேற்கு பகுதியில் ராஜப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு தமயந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ராஜப்பன் தினமும் மது குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தமயந்தி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனை அடுத்து உடல் கருகிய நிலையில் கிடந்த இளம்பெண்ணை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தமயந்தி பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |