Categories
உலக செய்திகள்

2 ஆண்டுகளுக்குப் பின்…. புகழ்பெற்ற பியர் திருவிழா…. கோலாகல தொடக்கம்…!!!!!

இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஜெர்மனியில் புகழ்பெற்ற பியர் திரு விழா உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பியர் திருவிழா தடைபட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் கொண்டாடப்படுகின்றது. பாரம்பரிய உடை அணிந்த மக்கள் பல்வேறு கலை நிகழ்வுகளில் ஈடுபட்டிருக்கின்றனர். பியர் திருவிழாவிற்கு பெயர்போன முனிச் நகர மேயர் விழாவை தொடங்கி வைத்ததும், முண்டியடித்துக்கொண்டு மது பிரியர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்க தொடங்கினர். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விழா விமர்சையாக நடைபெறுவதால்  பல்வேறு நாடுகளில் இருந்து 60 லட்சம் பேர் வரை ஒன்றுகூடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |