செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று பிரதோசத்தையொட்டி விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் இருக்கும் செண்பகவல்லி அம்மன் உடனுரை பூமிநாத சுவாமி கோவிலில் நேற்று பிரதோசத்தையொட்டி மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதையடுத்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
இதையடுத்து நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமையிலான கோவில் ஊழியர்கள் செய்தார்கள்.