Categories
உலக செய்திகள்

டென்னிஸ் பந்தை தீயிட்டு கொளுத்தி…. சிறுவன் மீது வீசி வெறிச்செயல்…. பிஞ்சு வயதில் நஞ்சு முளைத்த கொடூரம்…..!!!!!

அமெரிக்க நாட்டின் கனெட்டிகட் மாநிலத்தில் 8 வயது சிறுவன் ஒருவன் தீயிட்டுக் கொளுத்திய டென்னிஸ் பந்தை மற்றொரு சிறுவனின் முகத்தில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டாம்னிக் என்ற 6 வயது சிறுவன் வீட்டின் பின்புறமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 8 வயது சிறுவன், டாம்னிக்கை ஆசையாக அழைத்துள்ளார். இதையடுத்து அந்த சிறுவன் னென்னிஸ் பந்தில் பெட்ரோல் ஊற்றி, லைட்டரால் அதை கொளுத்தி டாம்னிக்கின் முகத்தில் வீசி இருக்கிறார்.

இதனால் வலியில் துடித்துடித்த டாம்னிக் கதறியபடி தாயாரிடம் ஓடியுள்ளார். அதனைத் தொடர்ந்து டாம்னிக்கை உடனடியாக பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டாம்னிக் விரைவில் குணமடைந்து விடுவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் டாம்னிக்கின் மருத்துவ சிகிச்சைக்காக அவரது தாயார் இணையத்தில் 1 1/4 கோடி ரூபாய் நிதி திரட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |