மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வருகிற மே 1-ம் தேதி நாடு முழுவதும் உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடுமதுபானம் விதிகள் 1981 விதி 25 II(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A),FL3(AA) மற்றும் FL11 உரிமம் கொண்ட பார்கள், கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினம் மதுபானம் விற்பனை கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி மதுபானங்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தெரிவித்துள்ளார்.