Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்றபோது…. மீனவருக்கு கடலில் நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மீன்பிடிக்க சென்ற மீனவர் கடலுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அடுத்துள்ள மேல குறும்பனை பகுதியில் ததேயூஸ் மகேஷ் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் சம்பவத்தன்று அதிகாலையில் 5 மீனவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த யூஜின் என்பவருக்கு சொந்தமான வள்ளத்தில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் குறும்பனையில் இருந்து 28 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் உடனடியாக கடலுக்குள் குதித்து அவரை மீட்டு கொண்டு வந்தனர். பின்னர் ததேயூஸ் மகேஷை குளச்சல் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ததேயூஸ் மகேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த குளச்சல் கடலோர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |