பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேதாசலம் நகரில் ஆட்டோ ஓட்டுநரான பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக விஜய்க்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஜய் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த பெற்ற மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.