Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மின்சாரம் கூட சரியா இல்ல…. ஒன்று திரண்ட பொதுமக்கள்…. மெழுகுவர்த்தி ஏந்தி கோரிக்கை….!!

இலவச வீட்டுமனை பட்டா மற்றும் மின் இணைப்பு கேட்டு பொதுமக்கள் மெழுவர்த்தி ஏந்தி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு வழங்கியுள்ளனர். அப்போது காடையாம்பட்டி எடுத்துள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து ஆட்சியர் கார்மேகத்தை  சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் ராஜீவ் காந்தி நகரில் மொத்தம் 200- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில், இதில் பலருடைய வீட்டிற்கு இதுவரையிலும் மின் இணைப்பு கொடுக்காததால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் உள்ளவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்க அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Categories

Tech |