Categories
மாவட்ட செய்திகள்

மனைவியின் இறப்பிற்கு இவர் தான் காரணம்..… “வாலிபர் வெட்டிக்கொலை”… கோட்டூரில் பரபரப்பு…!!

முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகில் மேல கண்டமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுரேஷ்(32). இவர் மனைவி 30 வயதுடைய ராதிகா. இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து சுரேஷ் தனது 2 மகள்களுடன் தென்கோடியில் உள்ள தனது மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

மேலும் ராதிகாவின் இறப்பிற்கு மேல கண்டமங்கலத்தில் உள்ள தனது வீட்டின் எதிர் வீட்டில் உள்ள கணேசன் என்பவருடைய மகன் முருகேசன்(35) தான் காரணம் என்று சுரேஷ் நினைத்து அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி சுரேஷ், ராதிகாவின் தம்பி தாஸ்(28) ஆகியோர் மேல கண்டமங்கலத்திற்கு வந்துள்ளனர்.அப்போது இரவு சுமார் 9 மணியளவில் முருகேசன் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, சுரேஷ் மற்றும் தாஸ் இருவரும் முருகேசனை வழிமறித்தனர்.

அப்போது தங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் முருகேசனின் தலையில் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து முருகேசனை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். அதன் பின் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் நேற்று முன்தினம் காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து சுரேஷ் மற்றும் தாசை தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மேலகண்டமங்கலம் பகுதியில் மறைந்திருந்த சுரேஷ் மற்றும் தாஸை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதத்தினால் வாலிபர் ஒருவரை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |