Categories
உலகசெய்திகள்

மறுபடியும் இவரா…? போலீஸ் மீது வெடிபொருட்கள் வீச்சு…. பிரபல நாட்டில் பரபரப்பு…!!

பிரான்சின் அதிபராக மீண்டும் இம்மானுவேல் மேக்ரான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் மற்றும் லியோன் பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீது பொதுமக்கள் வெடிபொருட்களை வீசியுள்ளார்கள்.

பிரான்ஸில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரான்ஸின் தற்போதைய அதிபரான இம்மானுவேல் 58.8 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அந்நாட்டின் அதிபர் பொறுப்பை ஏற்கவுள்ளார். இதற்கு உலக தலைவர தங்களது வாழ்த்துக்களை அதிபர் இம்மானுவேலுக்கு தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் பாரிஸ் மற்றும் லியோன் பகுதிகளில் மீண்டும் இம்மானுவேல் அதிபர் பதவியை ஏற்கவுள்ளதற்கு போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனை காவல்துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த முயன்றபோது பொதுமக்கள் அவர்களின் மீது வெடி பொருட்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

Categories

Tech |