நான்கு வயது சிறுவன் 40 நாடுகளின் பெயரை சொல்லி அசத்தல்:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் உமாதேவி தம்பதியினரின், நான்கு வயது சிறுவன் ஹரிஸ், தேசியக் கொடிகளை பார்த்து அந்த கொடிகளுக்குரிய நாட்டின் பெயரைச் சொல்லி அசத்துகிறார்.
தனியார் பள்ளியில் படித்து வரும் அந்த சிறுவனிடம் 40 நாடுகளின் கொடிகளை ஆசிரியர்கள் காண்பித்தனர், இரண்டு நிமிடத்தில் அந்த நாட்டின் பெயரை சொல்லி சிறுவன் அசத்தியுள்ளார்.
விரைவில் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் பெயர்களையும், நாட்டின் கொடிகள் குறித்து சொல்லும் வகையில் சிறுவனுக்கு பயிற்சி அளித்து வருவதாக, சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.