நெல்லை மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி அருகில் பழவூர் எனும் இடத்தில் அம்மன் கோவில் கொடைவிழா நடந்தது. இதற்காக பாதுகாப்பு பணிக்கு காவல்உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா உட்பட காவலர்கள் பழவூர் சென்றிருந்தனர். இதையடுத்து கோவில் கொடைவிழா முடிந்த பின் அங்கு வைக்கட்டிருந்த பிளெக்ஸ் போர்டுகளை அகற்றும்போது ஆறுமுகம் என்ற நபருக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்கு வாதத்தின்போது ஆறுமுகம் திடீரென்று காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளரை சககாவலர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
முன்பே காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆறுமுகம் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கைப்பதிவு செய்தது எஸ்.ஐ மார்க்கரேட் திரேஷாதான் என கூறப்படுகிறது. இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு ஆறுமுகம் அவரை கத்தியால் குத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதன்பின் ஆறுமுகத்தை பிடித்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவல் உதவி ஆய்வாளரை, நெல்லை சரக டிஐஜி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அதேபோன்று சம்பவ இடத்திற்கும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.