கடந்த மார்ச் 23ஆம் தேதி ராமேஸ்வரம் மண்டபம் கடற்கரையில் இருந்து பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்ற ஒரு படகையும், அதிலிருந்த 4 தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். இதையடுத்து 4 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின் 4 வாரங்கள் விசாரணை கைதிகளாக சிறையிலிருந்த 4 மீனவர்களையும், 3வது முறையாக நேற்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் இலங்கை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
இவர்களை விசாரணை மேற்கொண்ட நீதிபதி, 4 மீனவர்களையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார். அதுமட்டுமல்லாமல் மீனவர்களின் விசைப் படகு மீதான விசாரணை ஜூலைமாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் படகின் உரிமையாளர் படகிற்கான ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.