Categories
தேனி மாவட்ட செய்திகள்

கட்டிட வேலைக்கு சென்ற பெண்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கட்டிட வேலை செய்து கொண்டிருந்த பெண் சித்தாள் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள குலாலர்பாளையம் ரெங்கசாமி தெருவில் வசித்து வரும் மனோகரன் என்பவருக்கு நாகேஸ்வரி(46) என்ற மனைவி உள்ளார். சித்தாள் வேலை செய்து வரும் இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் மாடியில் நின்று வேலை செய்து கொண்டிருந்த நாகேஸ்வரி திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் நாகேஸ்வரியை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போடி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |