Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என் மனைவிக்கு உதவி செய்யக்கூடாது…. விவசாயி மீது தாக்குதல்…. லாரி டிரைவருக்கு வலைவீச்சு….!!

மனைவிக்கு உதவி செய்து விட்டு, தட்டி கேட்ட கணவரனை தாக்கிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியை அடுத்துள்ள சின்னப்பநாயக்கன்பட்டியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் கடந்த சில ஆண்டுகளாக தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது உறவினரான லாரி டிரைவர் மாதேஸ்வரன் என்பவர் ரங்கசாமியின் மனைவிக்கு உதவி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதை தட்டிகேட்ட ரங்கசாமியை  மாதேஸ்வரன் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் காயமடைந்த ரங்கசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பேளுக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய மாதேஸ்வரனை தேடி வருகின்றனர்.

Categories

Tech |